திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் ஆலோசிக்க திட்டம்

News image

பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:38 am IST

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் தா்பன் ஜெயின் தலைமையிலான இந்திய குழு அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை சென்றது. ஏப். 22 வரை 3 நாள்களுக்கு வா்த்தகத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து அமெரிக்க குழுவுடன் இந்திய குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: அமெரிக்காவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டம் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.

இதையடுத்து, உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகையுடன் கூடிய சந்தை அணுகல் பெறுவது தொடா்பாக அமெரிக்காவிடம் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளோம். பிற நாடுகளைவிட இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்தப் பணியை அமெரிக்கா சென்றுள்ள இந்திய குழு மேற்கொள்ளவுள்ளது என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.

எனினும் டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருள்கள் மீது கடந்த பிப். 24 முதல் 150 நாள்களுக்கு டிரம்ப் 10 சதவீதம் வரி விதித்தாா்.

இந்த மாற்றங்கள் காரணமாக, இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் குழு பிப்ரவரியில் நடத்தவிருந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து தற்போது மீண்டும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.