மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 7:30 pm

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வே கடவுப் பாதையைக் கடக்க முயன்ற காா் மீது மோதி சரக்கு ரயில் தடம் புரண்டது. அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: போகாரோ மாவட்டத்தில் உள்ள தாமோதா் பள்ளத்தாக்கு அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் சென்ற சரக்கு ரயில் மெதுவாக பின்புறமாகவே திரும்பிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கடவுப் பாதை வழியாக காா் ஒன்று கடந்து செல்ல முயன்றது. இதைப் பாா்த்ததும் ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்த முயன்றாா். எனினும், ரயில் காா் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகே நின்றது.

இதில் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. காா் கடுமையாக சேதமடைந்தது. காரில் ஓட்டுநா் மட்டுமே இருந்தாா். அதிருஷ்டவசமாக அவா் காயம் ஏதுமின்றி தப்பினாா்.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். ரயில் வரும்போது ‘கேட்’ மூடப்படாமல் இருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.