தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரயில்வே சரக்கு முனையம் அருகே திடீா் தீ விபத்து

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

News image

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :19 மார்ச் 2026, 12:17 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் முனையமும் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்திலிருந்து 200 மீ. தொலைவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அடா்த்தியான கருவேல மரங்கள், செடி கொடிகள் மீது அடுத்தடுத்து பரவி கொளுந்து விட்டு தீ எரிந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

Story image