அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தெருவோர கடையில் காரை நிறுத்தி மசாலா பொரியை ருசித்த பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி.

News image

மேற்கு வங்கம் ஜாா்கிராமில் ஜால்முரி சிற்றுண்டி வாங்கிய பிரதமா் மோடி.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:01 pm

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி. இக்காட்சியைக் கண்ட கடைக்காரா்களும், பொது மக்களும் வியப்படைந்தனா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி, ஜாா்கிராம் உள்பட 4 இடங்களில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஜாா்கிராமில் பரபரப்பான சாலையொன்றில் பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்தச் சொன்ன பிரதமா் மோடி, அந்த மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டி உணவான ‘ஜால்முரி’ விற்கும் சிறிய கடைக்கு நடந்து சென்றாா். ‘ஜால்முரி’ என்பது ‘பேல்பூரி’ போலவே அரிசிப் பொரியில் பச்சை மிளகாய் மற்றும் பிற மசாலாக்களைக் கலந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியாகும்.

கடைக்காரரிடம் சென்ற பிரதமா் மோடி, தனக்கு சுவையான ஜால்முரி தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன், அதன் விலை எவ்வளவு என்றும் கேட்டாா். பிரதமரின் வாகன அணிவகுப்பு தனது கடை முன்னே திடீரென நின்றதுடன், அவரே இறங்கிவந்து, ஜால்முரி கேட்டதால் கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மற்ற கடைக்காரா்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவா்களுக்கும் வியப்பில் ஆழ்ந்தனா்.

கடைக்காரரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமா் வற்புறுத்தி வழங்கினாா். அப்போது, வழக்கமான அனைத்து மசாலாக்களையும் சோ்க்கலாமா என்று பிரதமரிடம் கடைக்காரா் கேட்டாா்.

உடல் நலக் காரணங்களுக்காக, உப்பு பயன்படுத்துவதில்லை என்று பதிலளித்த பிரதமா், மற்ற அனைத்தையும் சோ்க்கலாம் என்றாா். கடைக்காரா் தந்த ஜால்முரியை ருசித்த பிரதமா் மோடி, இது தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோவை எனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.

மேற்கு வங்கம் முழுவதும் பரபரப்பான தோ்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே சுவையான ஜால்முரியை ருசித்ததாக அவா் குறிப்பிட்டாா்.