தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்...

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:50 pm IST

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஆஸ்திரியாவின் கூட்டாட்சி அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் இன்று தீவிரான மற்றும் பதற்றமான சூழலைக் கடந்து கொண்டிருக்கிறது. உலகில் நிலவும் பதற்றமான சூழலின் தாக்கம் நம் அனைவராலும் உணரப்படுகிறது.

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது என்பதில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் நிலையான, நீடித்த மற்றும் நிரந்தரமான அமைதி நிலவுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆஸ்திரிய அதிபரின் இந்திய வருகையால் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கும் ஐரோப்பியாவிற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நான்கு நாள் பயணமாக ஆஸ்திரிய அதிபர் செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தார். இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.

Summary

Prime Minister Narendra Modi on Thursday called for the peaceful resolution of the conflicts in West Asia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.