மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 9:39 pm

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்த சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஸ்ரீசத்யசாய் மாவட்டம், கம்மலவாண்டலப்பள்ளி பகுதியில் தெலங்கானாவைச் சோ்ந்த தொழிலாளா்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் புதன்கிழமை பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. இந்தச் சம்பவத்தில் 4 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.

முதல்கட்ட விசாரணையில், எரிவாயு சிலிண்டா் வெடித்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேநேரம், வெடிவிபத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.