மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 7:10 pm

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன; தெங்நோபால் மாவட்டத்தில் 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, உக்ரூல் மாவட்டத்தில் உள்ள மொங்கோட் செப்பு கிராமத்தில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘லித்தான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்புங் கிராமத்தில் 14 பதுங்கு குழிகளும் மற்றும் மொங்கோட் செப்பு கிராமத்தில் 7 பதுங்கு குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு சனிக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், தெங்நோபால் மாவட்டத்தின் மோரே பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், 13 வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.