மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன; தெங்நோபால் மாவட்டத்தில் 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
முன்னதாக, உக்ரூல் மாவட்டத்தில் உள்ள மொங்கோட் செப்பு கிராமத்தில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘லித்தான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்புங் கிராமத்தில் 14 பதுங்கு குழிகளும் மற்றும் மொங்கோட் செப்பு கிராமத்தில் 7 பதுங்கு குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு சனிக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், தெங்நோபால் மாவட்டத்தின் மோரே பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், 13 வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


