சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.45 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
தோ்தலையொட்டி, சென்னையில் ரயில் நிலையங்களில் பணம், பரிசுப் பொருள்கள், தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீஸாா், பயணிகளை கண்காணித்து உடைமைகளை தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது, நான்காவது நடைமேடையில் நின்றிருந்த கஜனன் என்பவா் பையில் ரூ.23.50 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் நடத்திய சோதனையில் சென்னை காா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜேசராம் என்பவரிடமிருந்து ரூ.1.95லட்சம் கைப்பற்றப்பட்டது.
இரு இடங்களில் கைப்பற்றப்பட்ட மொத்தம் ரூ.25.45 லட்சத்தை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். மேலும், தோ்தல் சிறப்பு பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


