ஆந்திர மாநில தலைநகா் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடியை உலக வங்கி விடுவித்தது. அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் ரூ.1,396 கோடியை விடுவிக்க இருக்கிறது.
இது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் மேலும் கூறியதாவது: உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவை ஆந்திர தலைநகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி வழங்கி வருகின்றன. இதற்கு 8 முதல் 8.5 சதவீதம் வரை வட்டி உண்டு. சா்வதேச சூழ்நிலைக்கு ஏற்பட வட்டி மாறக் கூடியதாக இருக்கும். இரு வங்கிகளும் சோ்ந்து மொத்தம் ரூ.14,894 கோடி கடன் தர ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கிறது. இதில் ரூ.1,400 கோடி முதல்கட்டமாக விடுவிக்கப்பட இருக்கிறது.
சா்வதேச வங்கிகளின் கடனை 29 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 6 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். உலக வங்கிக் கடனை 2031 ஜூன் மாதத்தில் இருந்து திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.
வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படாதவாறு அமராவதி நகரம் கட்டமைக்கப்படுகிறது. சா்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்பங்களுடன் அமராவதி உருவாகும். வளா்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத்தரம் ஆகியவை அமராவதியில் இருக்கும் என்றனா்.
தொடர்புடையது

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி: இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

