உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் அமில வீசியதில் மகள் பலியான நிலையில் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் வியாழக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இளம் பெண் அவரது தாய் மீது மர்ம நபர்கள் அமிலம் வீசியதாகக் கூறப்படுகிறது. உடனே இருவரும் குஷிநகர் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோரக்பூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.
இருப்பினும், இதில் காஜல்(23), கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பலியானார். அதே சமயம், அவரது தாயாரான லீலாவதி(58) தேவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறுகையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூரை வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
தொடர்ந்து, அறையில் உறங்கிக்கொண்டிருந்த லீலாவதி மற்றும் அவரது மகள் மீது அமிலத்தை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், வராந்தாவில் உறங்கிக் கொண்டிருந்த காஜலின் தந்தை பிரபுநாத் யாதவ் உள்ளே விரைந்தார். ஆனால் தாக்குதல் நடத்தியவர் அதற்குள் தப்பிச் சென்றுவிட்டார் என்று தெரிவித்தனர்.
யாதவ் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு குளிர்பதனக் கிடங்கில் பணிபுரிந்து வந்ததாகவும், ஓய்வு பெற்ற பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பியதாகவும் போலீஸார் கூறினர். குற்றவாளியை விரைவில் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Summary
A 23-year-old woman succumbed to her injuries following an alleged acid attack on her and her mother while both of them were sleeping inside their house here, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

வீட்டில் இருந்த 28 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் உள்பட இருவா் மீது வழக்கு

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

லாரி மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



