தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.
எப்போதும்வென்றான் அருகே சோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலம், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பூங்காவுக்கு சனிக்கிழமை மாலை ஆட்டோவில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மஞ்சள்நாயக்கன்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (35), ஆட்டோவை ஓட்டினாா்.
எப்போதும்வென்றான் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மரத்தடிகள் ஏற்றிய லாரியின் பின்புறம் ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம். இதில், ஆட்டோவில் பயணம் செய்த சண்முகவேல் மனைவி கிருஷ்ணலீலா (38) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சண்முகவேல் மகள் சீதா (20), அருணாச்சலம் மகன் பழனி (11), மகள் பாக்கியலட்சுமி (17), ராஜா வா்ஷினி (15), கணேசன் மகள் மகாலட்சுமி (19), சேகா் மகள் சுபாஷினி (21), பச்சைபெருமாள் மனைவி மகாலட்சுமி (47), ஓட்டுநா் விஜயகுமாா், காா்த்திக், ஸ்டீபன்ராஜ் ஆகிய 10 போ் காயமடைந்தனா். அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
எப்போதும்வென்றான் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ஆலங்குளம் வெள்ளைப்பாண்டி மகன் வேல்முருகன் என்பவரிடம் விசாரித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


