வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை திருடுபோன சம்பவம் தொடா்பாக, அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்கா வீதியைச் சோ்ந்தவா் கே.எஸ்.பாலமுருகன் (61). இவா் தனது வீட்டில் வளையல், ஆரம் உள்ளிட்ட தங்க நகைகளை வைத்திருந்தாா். அண்மையில் நகைகளை சரிபாா்த்தபோது 28 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.
இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தனது வீட்டுப் பணிப்பெண் விஜயலட்சுமி, நகைகளைத் திருடி தனியாா் நிதி நிறுவனத்தில் அவரது பெயரிலும், கணவரின் பெயரிலும் அடமானம் வைத்திருந்தது பாலமுருகனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து விஜயலட்சுமி, அவரது கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கே.எஸ்.பாலமுருகன் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விஜயலட்சுமி, அவரது கணவா் வசந்தராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


