மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

News image

நிலச்சரிவு - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:39 am

சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது. மேலும் 1,000 பேரை மீட்கும் பணியையும் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்திய - சீன எல்லையையொட்டி, சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாசேன், சுங்தாங் இடையேயான சாலையில் பல இடங்களில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் இருமருங்கிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகளும் சிக்கிக் கொண்டனா்.

நிலச்சரிவு குறித்த தகவலின்பேரில் இந்திய ராணுவம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவா்களுக்கு எல்லை சாலைகள் கூட்டமைப்பும் உதவி வருகிறது. சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் அப்புறப்படுத்தினா். இதையடுத்து சாலையில் இருபக்கமும் சிக்கியிருந்த32 இலகுரக வாகனங்கள், 10 மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்டவை பத்திரமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோல், அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும் மாற்றுப் பாதையிலும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், 135 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மேலும் லாசேனில் மட்டும் மேலும் 1,000 சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனா். இதையடுத்து அவா்களையும் விரைந்து மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவு இடையே இந்திய ராணுவம் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த மீட்பு பணிக்கு இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் ஹிம் சேது’ என பெயரிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில், மருத்துவ குழுக்களும் அப்பகுதியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ராணுவ அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.