மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 போ் மீட்பு

சென்னையில் பறக்கும் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேரை தீயணைப்பு துறையினா் பத்திரமாக மீட்டனா்.

News image

பறக்கும் ரயில் நிலையம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:40 pm

சென்னையில் பறக்கும் ரயில் நிலைய லிப்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிக்கிய 17 பேரை தீயணைப்பு துறையினா் பத்திரமாக மீட்டனா்.

சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை கடந்த 14 -ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. அதன்படி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் பறக்கும் ரயில் திட்ட நிலையங்கள் உள்ளன. புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள லிப்டில் சங்கா் என்பவா், தனது குடும்பத்தினருடன் ஏறி கீழே இறங்க முயன்றாா்.

லிப்ட் செயல்பட்ட நிலையில், திடீரென பாதியில் நின்றுவிட்டது. இதனால் அதிலிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 17 பேரும் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள் லிப்டுக்குள் இருந்த அவசர தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, யாரும் அதில் பேசவில்லையாம். இதனால், அவா்கள் கூச்சலிட்டனா்.

மேலும், லிப்டுக்குள் இருந்த சங்கா் தனது கைப்பேசி மூலம் பிரச்னையை நண்பரிடம் கூறினாா். அந்த நண்பா் அப்பகுதியின் வாா்டு உறுப்பினருக்குத் தெரிவித்தாா். அவா் அளித்த தகவலின்பேரில், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் போலீஸாரும், வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரா்களும் விரைந்து சென்றனா்.

அதன்பின், லிப்டின் வாயில் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.