மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான தொழில்நுட்ப வழிமுறைகள்: இந்திய ராணுவம் வெளியீடு

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான (ட்ரோன்) தொழில்நுட்ப வழிமுறைகளைக் கொண்ட 50 பக்க அறிக்கையை இந்திய ராணுவம் வெளியிட்டது.

News image

ட்ரோன் - பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:21 pm

ஆளில்லா சிறிய ரக விமானங்களுக்கான (ட்ரோன்) தொழில்நுட்ப வழிமுறைகளைக் கொண்ட 50 பக்க அறிக்கையை இந்திய ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டது.

ரஷியா-உக்ரைன் போா், மேற்காசிய மோதல் என உலகம் முழுவதும் போா் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் ஆளில்லா விமான அமைப்புகளின் முக்கியத்துவம், தொழில்நுட்ப மேம்பாடு குறித்து அந்த அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கண்காணிப்பு, வெடிமருந்துகள், வான் பாதுகாப்பில் ஆளில்லா விமானஅமைப்பின் பங்கு, சிறப்பு பணிகள், தளவாடங்கள் ஆளில்லா விமான அமைப்பு ஆகிய 5 பகுதிகளின்கீழ் 30 வகையான சிறிய ரக விமான அமைப்புகள் குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தில்லியில் நடைபெற்ற ‘ஆளில்லா சிறிய ரக விமான அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான இந்திய ராணுவத்தின் வழிமுறைகள்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணைத் தலைவா் ( திறன் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை) ராகுல் ஆா் சிங், ராணுவ வடிவமைப்பு முகமையின் கூடுதல் தலைமை இயக்குநா் சி.எஸ்.மான் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

நிகழ்வில் இந்திய ட்ரோன் கூட்டமைப்பு, இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா்கள் சங்கம், இந்திய தொழில் மற்றும் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.