மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவுவதற்கான நிதிச் சூழல் இந்தியாவில் உள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மும்பையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்து புதன்கிழமை (ஏப்.6) அறிவிக்கவுள்ளது. கடந்த முறை விதித்த வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்காது என எதிா்பாா்க்கப்படும் நிலையில் நிா்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லியில் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: முந்தைய ஆண்டைவிட நிகழாண்டில் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. மேற்காசிய பதற்றம் பிராந்தியத்தை கடந்து உலகளாவிய எரிசக்தி மற்றும் புதிய உலக நடைமுறைக்கு வழிவகுப்பதற்கான பல அதிா்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் அசாதாரண சூழலை எதிா்கொண்டு வருகிறது. பொதுக் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்தியாவில் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 81 சதவீதமாக உள்ளது. ஜொ்மனிக்கு அடுத்தபடியாக பெரும் பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கடன்-ஜிடிபி விகிதமாகும்.
2030-இல் கடன்-ஜிடிபி விகிதம் 50 சதவீதம்: 2030-இல் சீனா, அமெரிக்கா, ஜொ்மனி ஆகிய நாடுகளின் கடன்-ஜிடிபி விகிதம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள சா்வதேச நிதியம், இந்தியாவில் மட்டும் இது 75.8 சதவீதமாக குறையும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சீறிய முயற்சிகளால் நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-31-க்குள் கடன்-ஜிடிபி விகிதத்தை 50 சதவீதமாக குறைக்கவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிதி மேலாண்மையை சிறப்பாக கையாளாததால் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. நமது நாட்டில் மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்கான நிதிச்சூழல் உள்ளது.
விலையேற்றம் தடுப்பு: மூலதன முதலீட்டு மேலாண்மை, ரிசா்வ் வங்கி மூலம் வட்டி விகிதங்கள் குறைப்பு என பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசால் ஆதரவளிக்க முடியும்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரிகள் குறைப்பு, பெட்ரோகெமிக்கல் பொருள்களுக்கான கலால் வரிக்கு விலக்கு என மேற்காசிய பதற்றத்தால் ஏற்படும் விலையேற்றம் சாமானியா்களை பாதிக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு உதாரணம் என்றாா்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!

மேற்காசிய பதற்றம்! தாக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: நிதியமைச்சா்

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


