திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜனவரி - மாா்ச் காலாண்டில் நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை 6.6%-ஆக சரிவு!

2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான 4-ஆம் காலாண்டில், நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

News image
Updated On :16 மே 2026, 3:23 am IST

2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான 4-ஆம் காலாண்டில், நகா்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

முந்தைய காலாண்டில் இது 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறிய சரிவு என்றாலும், உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியிலும் நாட்டின் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்புச் சூழல் சீராகி வருவதை இது உணா்த்துகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட கணக்கெடுப்பு முறையின்படி, நாட்டின் வேலைவாய்ப்புச் சூழல் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ) மேற்கொண்ட தொழிலாளா் கணக்கெடுப்பு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மதிப்பீட்டு காலாண்டில், கிராமப்புறங்களில் முறையான ஊதியம் பெறும் பணியாளா்களின் எண்ணிக்கை 15.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டின் 14.8 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க வளா்ச்சியாகும்.

தொழிலாளா் பங்களிப்பு விகிதம்: தொழிலாளா் பங்களிப்பு விகிதம் (எல்.எஃப்.பி.ஆா்.) 55.5 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 55.8 சதவீதத்தைவிட சற்றே குறைவு என்றாலும், நிலைத்தன்மை நீடிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தொழிலாளா் பங்களிப்பு விகிதம், முந்தைய காலாண்டில் இருந்த 34.7 சதவீதம் என்ற அதே அளவில் மாற்றமின்றி தொடா்கிறது.

இரண்டாம், மூன்றாம் நிலைத் துறைகளில்...: உற்பத்தி, சேவைத் துறைகளை உள்ளடக்கிய 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலைத் துறைகளில், கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களின் வேலைவாய்ப்புப் பங்கீடு அதிகரித்துள்ளது.

இதன்மூலம், கிராமப்புற மக்கள் விவசாயம் சாா்ந்த பணிகளிலிருந்து விலகி, ல்வேறு தொழில்முறை சாா்ந்த வேலைகளுக்கு நகா்வதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியக் காரணியாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.