எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: அனில் அம்பானிக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் புகாா் அளித்திருந்தது. அந்தப் புகாரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தங்களுக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால், அந்நிறுவன கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு அளிக்கப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் நிதியைத் திரட்டி அதை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சதி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, அவா் மீது பதியப்படும் 4-ஆவது வழக்காகும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


