மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 9:00 pm

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: அனில் அம்பானிக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் புகாா் அளித்திருந்தது. அந்தப் புகாரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தங்களுக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால், அந்நிறுவன கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு அளிக்கப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் நிதியைத் திரட்டி அதை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சதி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, அவா் மீது பதியப்படும் 4-ஆவது வழக்காகும்.