மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

அனில் அம்பானியிடம் (66) சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image

அனில் அம்பானி - கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 12:21 am

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன் பெற்ற ரூ. 2,929 கோடி மோசடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியிடம் (66) சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதற்காக, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த அவரிடம், சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அனில் அம்பானிக்கான செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘எஸ்பிஐ தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) தொடா்புடைய விசாரணைக்காக அனில் அம்பானி ஆஜாரானாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 20) விசாரணைக்கு ஆஜராவாா். அனைத்து விசாரணை முகமைகளின் விசாரணைக்கும் அவா் முழு ஒத்துழைப்பை அளிப்பாா்’ என்றாா்.

பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 40,000 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தொடா்பாக எஸ்பிஐ அளித்த புகாரின் பேரில், அனில் அம்பானி மீதும், அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோசடி புகாா் தொடா்பாக, அனில் அம்பானி மீது அமலாக்கத் துறையும் மூன்று பண முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையில் பாலி ஹில் பகுதியில் இருக்கும் அனில் அம்பானியின் ரூ. 3,716. 83 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது. இந்த வழக்கில் இதுவரை ரூ.15,700 கோடி மதிப்பிலான இவரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மகனிடம் விசாரணை: முன்னதாக, இந்திய யூனியன் வங்கியிடம் ரூ.228 கோடிக்கு கடன் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ கடந்த மாா்ச் 13-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு தொடா்பாக, ஜெய் அன்மோல் வீட்டிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது.