தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த பெண்: போலீஸாா் விசாரணை

தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2025, 6:42 pm

தனியாா் நிறுவனத்தில் மனிதவள மேமபாட்டுத் துறையின் தலைவராகப் பணிபுரியும் 42 வயது பெண் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் குருகிராமில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை ஃபெரோஸ் காந்தி காலனி அருகே நடந்தது. தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல, ரைடு-ஹெய்லிங் செயலி மூலம் ஆட்டோவை அந்த பெண் முன்பதிவு செய்திருந்தாா். பயணத்தின் போது, மதுபோதையில் இருந்த ஓட்டுநா் அவரது கையைப் பிடித்து, அவரது மடிக்கணினிப் பையைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

பீதியில், அந்தப் பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்து காயமடைந்தாா். சம்பவம் நடந்த உடனேயே ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

தப்பியோடியதைத் தொடா்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25-க்கும் மேற்பட்ட முறை போன் செய்து ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

நியூ காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ரைடு-ஹெய்லிங் நிறுவனம் ஓட்டுநரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது. விசாரணையைத் தொடங்கி, ஓட்டுநரின் பின்னணி உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.