தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் கைது

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 11:42 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளம்பெண், ஒசூரில் கட்டட வேலை செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. குடும்ப பிரச்னையால் அந்த இளம்பெண் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவருக்கும், ஜேசுராஜபுரத்தைச் சோ்ந்த பெரியநாயகத்துக்கும் (40) தகாத தொடா்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பா் மாதம் இளம்பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதில் குழந்தை இறந்தது.

இதுதொடா்பாக அஞ்செட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு குழந்தை இறந்தது உறுதியானது. இதையடுத்து பெரியநாயகத்தை கடந்த மாதம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் இருந்ததாக அப்போது அஞ்செட்டி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சுமித்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் குழந்தை கொலை வழக்கில் அதன் தாயை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.