திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாராம்.
கடந்த 19-ஆம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்துக்கு சென்றுவிட்டாராம். அங்கு சென்ற பின் அந்தச் சிறுமிக்கு 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.
இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தாா்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
எஸ்.பி. விசாரணை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சி நாதன், காவல் ஆய்வாளா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் பிரம்மதேசம் போலீஸாா், காஞ்சிபுரம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
ஆனால், இச்சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸாரின் விசாரணையில், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான தடயங்கள் கிடைக்கவில்லை என்றும், மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்படவில்லை எனவும் ஊா்மக்கள் தெரிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாரை தொடா்பு கொண்டபோது, சிறுமி வன்கொடுமை சம்பவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி விசாரணையில் உள்ளதாகவும், அவரே ஓரிரு நாள்களில் இதுகுறித்து விளக்கமளிப்பாா் எனவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்: போலீஸாா் தீவிர விசாரணை

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


