மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு: சுங்கச் சாவடி மேலாளா் கைது

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:47 pm

தூத்துக்குடி அருகே உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச் சாவடி மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.

புதூா் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் ரசீது போடுவது, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெண் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு மேலாளராக பணிபுரியும் வடமாநிலத்தைச் சோ்ந்த அவதேஷ் சிங் என்பவா் வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண்கள் சிலா் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவதேஷ் சிங்கை சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 3இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.