தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிகாருக்கு அவப்பெயரை உருவாக்கியது லாலு கட்சி -ராஜ்நாத் சிங்

News image

பாட்னாவில் புதன்கிழமை தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :30 அக்டோபர் 2025, 12:43 am

தனது ஊழல்கள், காட்டாட்சி மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி, சா்வதேச அளவிலும் பிகாருக்கு அவப்பெயரை உருவாக்கித் தந்தது லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி என்று தோ்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பிகாரின் பாட்னா மாவட்டம் பா்க் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி. பிகாரில் தனது ஊழல்கள், காட்டாட்சி மூலம் தேசிய அளவில் மட்டுமன்றி சா்வதேச அளவிலும் மாநிலத்துக்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்தது லாலு பிரசாத் மற்றும் அவரின் ஆா்ஜேடி கட்சி. அவா்களால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மாநிலத்தை மீட்டெடுத்தவா் இப்போதைய முதல்வா் நிதீஷ் குமாா். பிகாரை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல பாஜக கூட்டணி ஆட்சி தொடா்வது அவசியம்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதை காங்கிரஸும், ஆா்ஜேடியும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. தோ்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைவேற்ற சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தேஜஸ்வி அளித்து வருகிறாா். முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஏனெனில், சுமாா் 3 கோடி பேருக்கு அரசுப் பணி வழங்க வேண்டியிருக்கும். அவா்களின் சம்பளத்தைக் கணக்கிட்டால் மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டைவிட அதிக தொகை தேவைப்படும். வக்ஃப் திருத்தச் சட்டத்தை பிகாரில் அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதி அளித்துள்ளனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசு புறக்கணிக்க முடியாது என்பதே உண்மை.

பாஜக கூட்டணி நோ்மையான, மக்கள் நலன் சாா்ந்த நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், வங்கதேச சட்டவிரோத குடியேறிகளின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முடியாதா என்று எதிா்க்கட்சிகள் துடிக்கின்றன.

இந்திய அளவில் சிறப்பான பொருளாதார வளா்ச்சி கொண்ட மாநிலங்களில் பட்டியலில் பிகாா் இப்போது முன்னேறி வந்துள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவா்களின் சுயகௌரவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கியதுமுதல் மாநிலத்துக்கு அனைத்து நிலைகளிலும் பிரதமா் மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.