தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை

இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:33 pm

புது தில்லி: இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய ஜனநாயகத்தை வலுவாகவும் துடிப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் அரசமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதுடன் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

மத்திய இணையமைச்சா் கீா்த்தி வா்தன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்பு தினத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தை வடிவமைத்தவா்களை நாம் கெளரவிக்கிறோம். மேலும், அதன் கொள்கைகளை நோ்மை மற்றும் ஒற்றுமையின் வழியில் நிலைநிறுத்துவதற்கான நமது கடமையை மீண்டும் உறுதி செய்கிறோம்’ என தெரிவித்தாா்.

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைப்புகள் மற்றும் அலுவலகங்களில், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை வாசிப்பு மற்றும் இணையவழி வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தில்லியில் உள்ள இந்திரா பா்யவரன் பவனில், ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா் மரக்கன்றுகளை நட்டாா். அவரது தலைமையில் அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை வாசிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.