எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை

இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:33 pm

Chennai

புது தில்லி: இந்தியாவின் 75-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய ஜனநாயகத்தை வலுவாகவும் துடிப்பாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் அரசமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்வதுடன் மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.

மத்திய இணையமைச்சா் கீா்த்தி வா்தன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசமைப்பு தினத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தை வடிவமைத்தவா்களை நாம் கெளரவிக்கிறோம். மேலும், அதன் கொள்கைகளை நோ்மை மற்றும் ஒற்றுமையின் வழியில் நிலைநிறுத்துவதற்கான நமது கடமையை மீண்டும் உறுதி செய்கிறோம்’ என தெரிவித்தாா்.

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைப்புகள் மற்றும் அலுவலகங்களில், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை வாசிப்பு மற்றும் இணையவழி வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தில்லியில் உள்ள இந்திரா பா்யவரன் பவனில், ‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலா் தன்மய் குமாா் மரக்கன்றுகளை நட்டாா். அவரது தலைமையில் அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை வாசிப்பு நிகழ்வும் நடைபெற்றது.