பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு! - எங்கே?

தெலங்கானாவில் மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறப்பு

News image

மஞ்சள் வாரிய தலைமையகம் திறப்பு - படம்| அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பதிவு

Updated On :29 ஜூன் 2025, 12:48 pm

தேசிய மஞ்சள் வாரியத்துக்கான புதிய தலைமையகம் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வாரிய தலைமையகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 29) திறந்து வைத்தார்.

தெலங்கானாவிலுள்ள நிஸாமாபாத் நகரில் மஞ்சள் வாரிய தலைமையகத்தை திறந்துவைத்த அமித் ஷா, 2030-ஆம் ஆண்டுக்குள் மஞ்சள் ஏற்றுமதியை 1 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவதாக பேசினார்.

தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஞ்சளின்  மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், மஞ்சள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் மஞ்சள் வாரியம் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Turmeric Board inaugurated by Amit Shah today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.