சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உத்தரகாசியில் மேக வெடிப்பு: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள்.

News image
உத்தரகாசியில் மேக வெடிப்பு நிகழ்ந்த இடம்.
Updated On :29 ஜூன் 2025, 5:12 am

DIN

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள்.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை மற்றும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானதாக பேரிடர் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. யமுனோத்ரி நெடுஞ்சாலையில் மேக வெடிப்பு பற்றிய தகவல் நள்ளிரவில் கிடைத்ததாக பர்கோட் காவல் நிலைய பொறுப்பாளர் தீபக் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு கூடாரம் அமைத்து வசித்து வந்ததைக் அவர்கள் கண்டறிந்தனர். கனமழையால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை எட்டு முதல் ஒன்பது பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள குத்னூர் கிராமத்தில் கனமழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் ஓஜ்ரி அருகே உள்ள சாலையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. விவசாய நிலங்கள் குப்பைகளால் நிரம்பியுள்ளன. சயனசட்டியில் உள்ள குப்தா குன்ஷாலா திரிகிலி மோட்டார் பாலமும் ஆபத்தில் உள்ளது. கனமழையைத் தொடர்ந்து யமுனையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

Summary

The labourers went missing following heavy rainfall and cloudburst near Silai Bend in Barkot area on way to the Yamunotri temple in Uttarkashi district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.