ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோவால் சர்ச்சை

News image
Updated On :28 ஜூன் 2025, 3:30 am

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் பலியாகினர். இந்த சம்பவமானது, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளைக் கையாளும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விடியோ பதிவு செய்யப்பட்ட நாள் குறித்து தெளிவாகத் தெரியாவிட்டாலும், விபத்து ஏற்பட்ட சில நாள்களில்தான் விடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், கொண்டாட்டத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

ஏர் இந்தியா ஊழியர்களின் கொண்டாட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடியோ குறித்த வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஏர் இந்தியா எப்போதும் துணை நிற்கும். நிறுவனத்தில் கொண்டாட்டம் தொடர்பாக சமீபத்தில் வெளியான விடியோவுக்கு எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில், இந்த தவறான நடத்தை மூலம் எங்களை மதிப்பிட முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் பொறுப்புணர்வு மீதான உறுதிப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.