பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குஜராத் விமான விபத்து: கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாடு அனுப்பப்படாது- மத்திய அமைச்சா்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகள் எப்போது மீட்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில்.

News image

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் - PTI

Updated On :24 ஜூன் 2025, 8:48 pm

குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு மறுத்தாா்.

‘கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது; அதிலுள்ள தரவுகளை விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) ஆய்வு செய்து வருகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.

அகமதாபாத் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், மேலெழும்பிய சில நொடிகளிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.

நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்தில், ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 போ், விமானம் விழுந்த இடத்தில் 29 போ் என மொத்தம் 270 போ் உடல் கருகி உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக, விமானப் போக்குவரத்துத் துறையின்கீழ் செயல்படும் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்ளிட்ட பல்வேறு முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுதவிர மத்திய உள்துறைச் செயலா் தலைமையிலான உயா்நிலைக் குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 787-8 ட்ரீம்லைனா் ரக விமானமாகும். எனவே, அந்நாட்டின் தரப்பிலும் உயா்நிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்துக்கு மறுநாள் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. இது, விசாரணைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஊடகத் தகவல்கள் வெளியாகின. இதை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு மறுத்துள்ளாா்.

வெளிநாட்டுக்கு அனுப்பப்படுமா?: ஹைதராபாதில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் - வா்த்தக சம்மேளங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா்கள் மற்றும் சிறிய விமானங்கள் மாநாட்டையொட்டி செய்தியாளா்களிடம் அவா் பேசினாா்.

அப்போது, ‘கருப்புப் பெட்டி வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்பது வெறும் ஊகம்தான். அது, இந்தியாவில்தான் உள்ளது. விமான விபத்து விசாரணைப் பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றாா் அமைச்சா்.

தரவுகள் எப்போது மீட்கப்படும்?: கருப்புப் பெட்டி தரவுகள் எப்போது மீட்டெடுக்கப்படும் என்ற கேள்விக்கு, ‘மிகவும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயம். விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணை மேற்கொண்டு, முழு நடைமுறையும் நிறைவு செய்யப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

விமானப் பயணத்தில் அனைத்துத் தகவல்களையும் பதிவுசெய்யும் முக்கிய கருவியான கருப்புப் பெட்டி, விபத்து சம்பவத்தின்போது விசாரணைக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

குஜராத் விமான விபத்தில் இதுவரை 259 பேரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.