மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது மாமாவுடனான தவறான உறவை கைவிட முடியாமல், கணவரைக் கொலை செய்திருக்கிறார் குஞ்ஜா சிங். ஜூன் 24ஆம் தேதி, நபிநகர் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 24 வயது பிரியன்ஷு குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், இது கூலிப்படையினரின் வேலையாக இருக்கலாம், தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால், தீவிர விசாரணையில், பிரியன்ஷுவின் சொந்த மனைவியே இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இது குறித்து காவல்துறை கூறுகையில், பிரியன்ஷு மனைவிக்கும், அவரது மாமா ஜீவன் சிங் (52) இடையே 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்திருக்கிறது. குடும்பத்தினரின் கட்டாயத்தின்பேரில், குஞ்சா சிங், பிரியன்ஷுவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், அவரால் பிரியன்ஷுவுடன் வாழ முடியவில்லை. அப்போதுதான் தேனிலவு கொலை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து, தானும் கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ஜீவன் சிங்குடன் இணைந்து, புதிதாக சிம் கார்டு, செல்போன் வாங்கி, கூலிப் படையை அமர்த்தியுள்ளார்.
சம்பவத்தன்று, பிரியன்ஷு, வாராணசியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது மனைவியிடம் தான் எங்கு வந்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிவிக்க, அவரும் கூலிப்படைக்கு அந்த தகவலைக் கூறியிருக்கிறார். அவர்கள் பிரியன்ஷுவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
பிறகு விசாரணையின்போது பிரியன்ஷுவை, அவரது மனைவியே ஆள்களை அமர்த்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஜீவன் சிங் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
தேனிலவு கொலையே நாட்டை உலுக்கிய நிலையில், அதனைப் பார்த்து பிகாரில் இப்படியொரு கொலை நடந்திருப்பது, உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதையும் படிக்க.. மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!
Summary
A Bihar woman shot and killed her husband after being inspired by the incident of him taking her on a honeymoon to Meghalaya and then killing her.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

ஏப். 13ல் பிகார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறார் நிதீஷ் குமார்?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


