தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ரெஹான். வசந்த் குஞ்ச் பகுதியில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ளப் பின்வாங்கியுள்ளார். சிறுமியுடன் இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து மன உளைச்சலுக்குள்ளான சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ஆசிட் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜூன் 18ல் இந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 20 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரெஹான் திருமணம் செய்துகொள்வதாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்த போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் தனது மகளின் மொபைல் போனையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அதில் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் குரல் பதிவுகள் இருந்துள்ளது.
வசந்த் விஹாரின் துணைப்பிரிவு நீதிபதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 25 அன்று வசந்த் குஞ்ச் (தெற்கு) காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ரங்புரி பஹாரியில் உள்ள சங்கர் முகாமில் வசிக்கும் ரெஹான் கைது செய்யப்பட்டார். 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், விமான நிலையத்தில் சுமை ஏற்றும் பணியாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.
Summary
A girl attempted suicide by drinking acid in southwest Delhi's Vasant Kunj area after she was allegedly sexually assaulted by a man she was in a relationship with, police said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்: போலீஸாா் தீவிர விசாரணை

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


