2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்

பிகாரின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து மத்திய அமைச்சரின் பதில்...

News image
மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி- கோப்புப்படம்
Updated On :26 செப்டம்பர் 2024, 5:58 am

DIN

பிகாருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று நிதி அயோக் முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிகாரின் மீது பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தி வருவதாகவும், எந்த காரணத்துக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடாது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து கிடையாது

பிகார் மாநிலம் பாட்னாவில் தனது 80-ஆவது பிறந்த நாளை மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி புதன்கிழமை கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஜித்தன் ராம் பேசியதாவது:

“சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்புவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், கடைசி நிதிநிலை அறிக்கையில் மாநிலத்துக்கு எவ்வளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். ரூ. 300 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிகார் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று நிதி ஆயோக் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. பிகாரின் வளர்ச்சி எந்த சூழலிலும் நின்றுவிடப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார், மத்திய அரசிடம் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரினார். கடந்த ஜூலை 22-ஆம் தேதி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று கூறினார்.

அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் 2012-ஆம் ஆண்டு அறிக்கையின்படி பிகாருக்கு வழங்க முடியாது எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ​​பிகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.