மணிப்பூர்: அமைச்சர் வீடு மீது வெடிகுண்டு வீச்சு
மணிப்பூர் மாநில அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டுகள் வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இம்பால்: மணிப்பூர் மாநில அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டுகள் வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
காஷிம் வசும், மாநிலத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். உக்ருல் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பின்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் சுவர் மற்றும் சில பகுதிகள் மட்டுமே சேதமடைந்தன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை; சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், டாங்குல் நாகா பழங்குடியின சமூகத்தின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததுடன், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...