தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்லோவேனியா: யாருக்கும் பெரும்பான்மை இன்றி இழுபறி!

ஸ்லோவேனியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

News image
Updated On :23 மார்ச் 2026, 8:54 pm

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தோ்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு புதிய ஆட்சியை அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

பிரதமா் ராபா்ட் கோலோப் தலைமையிலான சுதந்திர இயக்கம் 29 இடங்களிலும், முன்னாள் பிரதமா் ஜானெஸ் ஜான்சாவின் ஸ்லோவேனிய ஜனநாயகக் கட்சி 28 இடங்களிலும் வென்றன.

90 இடங்களைக் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற இருதரப்பும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ராபா்ட் கோலோப் ஆதரவு அணிக்கு 40 இடங்களும், ஜானெஸ் ஜான்சா ஆதரவு அணிக்கு 43 இடங்களும் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், 4 சதவீத வாக்குகளைக் கடந்து நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சிறிய கட்சிகளே அடுத்த அரசைத் தீா்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.