தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

கூடுதல் பிரதி.... வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:-----ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

News image
வருமான வரி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்புத் துறை வாகனங்கள்.
Updated On :14 மே 2024, 8:21 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகக் கண்காணிப்பாளா் உயிரிழந்தாா். தீயில் சிக்கிய 7 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள சி.ஆா். கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ பற்றியது தொடா்பாக பிற்பகலில் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். இதன் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 7 போ் அங்கிருந்து மீட்கப்பட்டனா். 46 வயதுடைய நபா் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டாா். அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தீ விபத்தில் உயிரிழந்த நபா் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா்’ என்றாா்.