புது தில்லி: வரும் 2047ஆம் ஆண்டில், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது என்பது, ஒவ்வொரு இந்தியர்களுக்குமான இலக்கு, இதில், அனைத்து மாநிலங்களும் பங்கேற்று, இலக்கை அடையும்வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மாநில அரசுகள்தான் நேரடியாக மக்களுடன் தொடர்புகொண்டிருப்பவை என்றும் அதனால், விக்சித் பாரத் திட்டத்துக்காக மாநிலங்களின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்குமான லட்சியம்.
மாநில அரசுகள்தான், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதால், மாநிலங்கள் இந்த திட்டத்தின் இலக்கை அடைய ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்.
இந்த நூற்றாண்டானது, தொழில்நுட்பம் மற்றும் புவியியல் மாற்றங்களுக்கானது. இவை அனைத்துமே நமக்கான வாய்ப்புகள். இந்த மாற்றங்களை இந்தியா தனது முன்னேற்றப்பாதைக்காகப் பயன்படுத்திக்கொண்டு, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை மைல்கல்லாக இதுவே இருக்கும்.
2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படும்.
மத்திய அரசின் திட்டங்கள், நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே இலக்கு என்றும் மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

தென்மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


