டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாளை லண்டன் செல்கிறார் ராஜ்நாத் சிங்! 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை திங்கள்கிழமை(ஜன.8) லண்டன் செல்கிறார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

DIN

புதுதில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை திங்கள்கிழமை(ஜன.8) லண்டன் செல்கிறார். அவருடன்  டிஆர்டிஓ,பாதுகாப்புத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சகக் குழுவும் செல்கிறது.

ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் போது, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார். பாதுகாப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ராஜ்நாத் சிங் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு,காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் கேமரூனை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரிட்டன் பாதுகாப்புத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் உரையாடுவார் மற்றும் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அவா் உரையாடுகிறாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தனது பிரிட்டன் பயணத்தின்போது அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கிராண்ட் ஷாப்ஸை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். தலைநகா் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரது நினைவு இல்லங்களை ராஜ்நாத் சிங் பாா்வையிடுகிறாா். தொடா்ந்து, பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அவா் உரையாடுகிறாா்.

கடந்த 2002, ஜன.22-இல் அப்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ் பிரிட்டனுக்குப் பயணத்துக்கு பின்னர், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரிட்டன் செல்வது முக்கியத்துவம்  வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.