போலந்து சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து, ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவிருக்கிறார்.
முன்னதாக, உக்ரைன் பிரச்னைக்கு அமைதி தீா்வை எட்டுவது குறித்து அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் கருத்துகளைப் பரிமாற ஆவலுடன் உள்ளேன் என்று புது தில்லியில், போலந்து புறப்படும் முன், பிரதமா் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
போலந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் அல்லாமல், உக்ரைனுக்கு ரயில் பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. போலந்தில் இருந்து உக்ரைன் தலைநகா் கீவ்-க்கு ‘ரயில் ஃபோா்ஸ் ஒன்’ எனும் சொகுசு ரயிலில் பிரதமா் மோடி பயணிக்கவுள்ளாா். இது, சுமாா் 10 மணிநேர பயணம் கொண்ட சர்வதேச தரத்துடன் இயக்கப்படும் ரயிலாகும். அதாவது, கீவ் நகரில் சுமாா் 7 மணி நேரம் பிரதமா் இருக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, 7 மணி நேரம் கீவ் நகரில் இருப்பதற்காக, மோடி கிட்டத்தட்ட 20 மணி நேரம் ரயிலில் இரவு முழுக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
உக்ரைனுக்கு விமானத்தில் செல்லாமல், ரயிலில் செல்வதற்குக் காரணம், உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ரஷியா - உக்ரைன் போரால் மூடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், விமானத்தை விடவும் ரயில்தான் அந்நாட்டுக்குச் செல்ல பாதுகாப்பான போக்குவரத்தாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு பிறகு கீவ் நகருக்கு செல்ல சா்வதேச தலைவா்கள் பலரும் இந்த ரயிலையே பயன்படுத்தி வருகின்றனா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோா் இந்த ரயிலில் பயணித்துள்ளனா். உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்த ரயிலைதான் பயன்படுத்துகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் மீது, ரஷியாவின் படையெடுப்பை இந்தியா இதுவரை வெளிப்படையாக கண்டிக்காத நிலையில், பிரதமா் மோடி உக்ரைன் பயணிப்பது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
புது தில்லியிலிருந்து நேற்று போலந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அங்கு வியாழக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அங்கிருந்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளாா்.
கடந்த 1991-ஆம் ஆண்டில் உக்ரைன் சுதந்திர நாடாக உருவெடுத்த பின் அங்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருவோர கடையில் காரை நிறுத்தி மசாலா பொரியை ருசித்த பிரதமர் மோடி!

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

பிரச்னைகளுக்குப் போா் தீா்வல்ல: பிரதமா் மோடி

காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா் மோடி! அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு




