மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

News image

உச்ச நீதிமன்ற அமர்வு

Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:10 am

புது தில்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிடில், அவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள், மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது என்றும், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

மனிதாபிமானமற்ற முறையில், மருத்துவர்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கப்படுகிறளார்கள். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து பணிக்குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பயிற்சி பெண் மருத்துவா் கொல்லப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 14-ஆவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் அவசரமில்லா சிகிச்சை பிரிவுகள் முடங்கி, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று மருத்துவா்கள் அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.