திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மும்பையில் மீண்டும் கனமழை!

பாந்த்ரா, குர்லா வளாகம் போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

News image

மும்பையில் மீண்டும் மழை

Updated On :20 ஆகஸ்ட் 2024, 6:06 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை 9.30 மணி முதல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் பாந்த்ரா மற்றும் பாந்த்ரா குர்லா வளாகம் போன்ற சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று மதியம் 12.22 மணிக்கு அரபிக்கடலில் 4.70 மீட்டர் உயரத்துக்கு அலை வீசும். கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 7.81 மிமீ, 3.06 மிமீ மற்றும் 3.62 மிமீ மழை பதிவாகியுள்ளது என்று அதிகாரி கூறினார்.

பிரஹன் மும்பையில் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து போன்றவை வழக்கமான இயங்குகின்றன. ஆனால் மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக மும்பையில் வெப்பநிலை வாட்டிவந்த நிலையில், மழை பெய்ததால் பூமி குளிர்ந்து வெப்பம் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் மும்பையில் கனமழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.