புவனேஸ்வரம் மற்றும் கட்டாக்கில் விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாட்டங்களின்போது டிஸ்க் ஜாக்கி (பதிவு செய்த பாடல்கள்) பயன்படுத்தத் தடை விதித்து காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நாடு முழுவதும் செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றது. புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் பூஜை அமைப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரு கூட்டங்களிலும் சிலை கரைப்பு ஊர்வலங்கள் உள்ளிட்ட பூஜைகளின்போது டிஜே இசையைப் பயன்படுத்த வேண்டாம் என அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கட்டாக்கில் சிரை கரைப்பு விழா செப்டம்பர் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஏழு நாள்களுக்கு முன் உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என பூஜை குழுக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், புவனேஸ்வரத்தில் செப்டம்பர் 8, 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
விநாயக பூஜை குழுவினர் டிஜே இசையை இசைக்க வேண்டாம் என்றும், டிஜேவுக்குப் பதிலாகப் பாரம்பரிய இசைக்கருவிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மக்களிடம் வலுக்கட்டாயமாக நன்கொடை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
பூஜையின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தலைநகரில் போதிய எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை காவல் துறையினர் நிறுத்துவார்கள் என்று கட்டாக் மற்றும் புவனேஸ்வர் காவல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் டிஜே நிறுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இதற்குத் தடை விதிக்கக் கோரி டிஜே உரிமையாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



