தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரக்‍ஷா பந்தன்: ராகுல், பிரியங்கா பகிர்ந்த புகைப்படங்கள்!

உடைக்க முடியாத பந்தம்.. பிரியங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராகுல்..

News image

ராகுலுடன் பிரியங்கா காந்தி

Updated On :19 ஆகஸ்ட் 2024, 6:07 am

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

ரக்‍ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அண்ணன்-தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை.

இது பாதுகாப்புக் கயிறு எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்ட புகைப்படம்

பிரியங்கா காந்தி வெளியிட்ட புகைப்படம்

அதேபோன்று பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில்,

ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதை நினைவுகூரும் வகையில், அண்ணன்-தங்கை இடையேயான உறவு ஒரு பூச்செடி போன்றது.

அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள், மரியாதை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதல், நட்பை ஆழமாக்குவதற்கான உறுதிப்பாடு அடித்தளத்திலிருந்து செழித்து வளரும் என்று என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.