மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சித்தராமையா பதவி விலகலா? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!

சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு..

News image

கோப்புப்படம் - din

Updated On :19 ஆகஸ்ட் 2024, 6:06 am

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் முகாமிட்டுள்ளதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் அளித்து மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஆளுநரின் உத்தரவுக்கு தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை முறையிடப்பட்டுள்ளது. சித்தராமையாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் பெங்களூரு வந்துள்ளனர்.

இதனிடையே, ஆக. 22ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்துக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் சித்தராமையா மீது வழக்குப் பதியப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

மேலும், சித்தராமையா கர்நாடகத்தின் முதல்வராக தொடர்வாரா அல்லது பதவி விலகுவாரா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், பெங்களூருவில் கார்கே மற்றும் வேணுகோபாலை சந்தித்து கட்சியின் மாநில நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, எம்எல்ஏக்களின் கூட்டத்தை தொடர்ந்து தில்லி சென்று ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.