பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காதலியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏரியில் சடலமாக மீட்பு!

காதலியின் கழுத்தை நெரித்து கொண்றுவிட்டு இளைஞர் தற்கொலை..

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 10:50 am

நவி மும்பையில் காதலியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வகோலி பகுதியில் அழுகிய நிலையில் ஸ்வஸ்திக் பாட்டீலின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் மயூர் புஜ்பால் தெரிவித்தார்.

மும்பையின் பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் பாட்டீல்(22). புதன்கிழமை தனது (19) வயது காதலியான பாவிகா மோர் என்ற கல்லூரி மாணவியைக் கழுத்து நெரித்து கொண்றுவிட்டு பாலத்திலிருந்து ஏரியில் குதித்ததாகக் கூறப்படுகிறது.

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். புதன்கிழமை இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோபத்தில் காதலியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் உயிரிழந்ததை அறிந்த பாட்டீல் பாலத்தில் இருந்து குறித்துள்ளார்.

இளைஞர் ஒருவர் பாலத்திலிருந்து ஏரியில் குதித்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஏரிக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது. பெண்ணின் சடலத்தை மீட்பு போலீஸால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்தை அடைந்த காவல் துறையினர், பாட்டீலைத் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் பிற குழுக்களை ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.