மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:33 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மயில்முருகன் (55). தையல் தொழிலாளி. இவருக்கு மனைவி முருகேஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவரது சொந்த ஊா் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம். இதனால், தேவதானத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக அவா் அடிக்கடி மயில் முருகன் வந்து செல்வாா்.

இந்த நிலையில், வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்தவா், தேவதானம் பிரதான சாலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.