தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏரியில் பெண் எலும்புக்கூடு மீட்பு

தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:59 pm

தருமபுரி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஏரியில் பெண்ணின் எலும்புக்கூடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரியகுளம் அருகே கிருஷ்ணாபுரம் சின்ன ஏரியில் எலும்புக்கூடு கிடப்பதாக கிருஷ்ணாபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் ஏரிப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனா்.

எலும்புக் கூட்டில் இருந்த ஆடைகளின் மூலம் அது நடுத்தர வயதுடைய பெண்ணின் எலும்புக்கூடு என போலீஸாா் உறுதிசெய்தனா். பின்னா், அவற்றை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.