மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2026, 8:00 pm

பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

2021, ஜூலை மாதம் தனது புதிய குடியிருப்பில் குடியேறிய பெண் மீது தொடா்ச்சியாக பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகவும், செப்டம்பா் மாதம், பெண்ணின் ஸ்கூட்டியை சேதப்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

ஆனால், மாா்ச் 20-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பல்வேறு கட்ட வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி அநமிகா தெரிவித்தாா். தெளிவற்ற தகவல்கள், சம்பவத்திற்கான பிற சாட்சிகள் மற்றும் குற்றத்துக்கான ஆதாரம் இல்லை. மேலும் காவல் துறையின் வழக்குப் பதிவிலும் உள்ள குழறுபடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவரை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.