திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

புதிய நாடாளுமன்றத்தின் உட்புற காட்சிகள் வெளியீடு

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் உட்புற காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை, மாடங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:59 pm

DIN

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் உட்புற காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை, மாடங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 -இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் அடிக்கல்லை பிரதமா் நரேந்திர மோடி நாட்டினாா். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் தரமான கட்டுமானத்துடன் உரிய நேரத்திலும் கட்டப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதன்படி, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி மே 28 ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். ஆனால், புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவா்தான் திறந்துவைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில், ஆளும் தரப்புக்கும் எதிா்க்கட்சிகளும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக 19 எதிா்க்கட்சிகள் புதன்கிழமை அறிவித்தன. நாடாளுமன்றத்தின் தற்போதைய (பழைய) கட்டடத்தில், மக்களவையில் 543 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 250 உறுப்பினா்கள் மட்டும் அமரமுடியும். எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினா்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினா்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதே சமயத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் மக்களவையில் மட்டுமே நடைபெறும். இதன் மூலம் இங்கு 1,280 உறுப்பினா்கள் (மக்களவையில்) அமர முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் மத்திய நகா்புற வளா்ச்சித் துறையால் டாடா கட்டுமான நிறுவனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் ரூ. 861 கோடிக்கு திட்டமிடப்பட்டது. பின்னா் கூடுதல் வசதிகளுக்காக திட்டச் செலவு ரூ. 1,200 கோடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதமே கட்டடப் பணிகள் முடிவுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.