தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.. ஒன்றைத்தவிர: பாஜக

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக வெற்றிமுகம் காட்டிவருகிறது.

News image

திப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏற்கப்படும்.. ஒன்றைத்தவிர: பாஜக

Updated On :2 மார்ச் 2023, 11:46 am

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக வெற்றிமுகம் காட்டிவருகிறது.

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, 832 வாக்குகள் வித்தியாசத்தில் போர்தோவாலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஸ் குமார் சாஹாவை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில், புதிய கட்சியாக உருவெடுத்திருக்கும் திப்ரா மோதாவின் திப்ராலாந்து என்ற தனி மாநிலக் கோரிக்கையையைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக பாஜக  அறிவித்துள்ளது.

இன்று மதிய நிலவரப்படி, திரிபுராவில் 32 தொகுதிகளில் பாஜக முன்னணியில் உள்ளது. இது பெரும்பான்மை தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒரு தொகுதி அதிகமாகும். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மக்கள் முன்னணி கட்சியும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

திரிபுராவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் விக்ரம் மாணிக்யா தலைமையிலான திப்ரா மோதா முதல் முறையாக இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இடது முன்னணி - காங்கிரஸ் கூட்டணி ஒட்டுமொத்தமாக 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் பாஜக யாருடைய ஆதரவும் இன்றி ஆட்சிப் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மாநிலத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போகிறோம். இதைத்தான் நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.