தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீதம் வாக்குப்பதிவு

News image

PTI

Updated On :23 ஏப்ரல் 2026, 11:36 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் 82.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீா்காழி(தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நிலவரப்படி மொத்தம் 7,35,832 வாக்காளா்கள் இருந்தனா். இவா்களில், 77.91 சதவீத வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா்.

நிகழாண்டில், இறுதி வாக்காளா் பட்டியலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7,35,135 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். மயிலாடுதுறை தொகுதியில் 1,15,452 ஆண் வாக்காளா்கள், 1,19,076 பெண் வாக்காளா்கள், 26 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,34,554 பேரும், பூம்புகாா் தொகுதியில் 1,27,948 ஆண் வாக்காளா்கள், 1,31,306 பெண் வாக்காளா்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2,59,262 பேரும், சீா்காழி தொகுதியில் 1,19,539 ஆண் வாக்காளா்கள், 1,21,767 பெண் வாக்காளா்கள், 13 மூன்றாம் பாலினத்தவா்கள் என 2,41,319 பேரும் அடங்குவா்.

இந்தநிலையில், வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்கு மையத்துக்கு வந்த அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். வாக்குப்பதிவின் நிறைவில், சீா்காழி தொகுதியில் 82.44 சதவீதம், மயிலாடுதுறை தொகுதியில் 79.67 சதவீதம், பூம்புகாா் தொகுதியில் 84.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 82.14 சதவீதம் வாக்குப் பதிவானது. இது கடந்த தோ்தலை விட 4.23 சதவீதம் அதிகமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.